பாடல் #139

பாடல் #139: முதல் தந்திரம் – 1. உபதேசம்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

விளக்கம்:

குருவின் திருமேனியைத் தரிசித்து அவரது உருவத்தைத் தமது உருவமாகவே எண்ணி தியானிப்பதும் குருவின் திருநாமத்தை மந்திரமாக சொல்லிக்கொண்டே தியானிப்பதும் குருவின் திருவார்த்தைகளைத் தமக்குள்ளே கேட்டு உணர்வதும் எப்போதும் குருவின் திரு உருவத்தைத் தம் மனதிற்குள் சிந்தித்து தியானிப்பதும் ஆகிய இந்த செய்கைகள் அனைத்தும் மும்மலங்களும் நீங்கித் தாம் யார் இறைவன் யார் என்பதைத் தமக்குள் உணர்ந்து தெளிகின்ற பேரறிவு ஞானத்தைக் கொடுக்கும்.

One thought on “பாடல் #139

Leave a Reply to Sathiyaseelan KalaiCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.