பாடல் #1271

பாடல் #1271: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

நின்றிடும் விந்துவென் றுள்ள வெழுத்தெல்லாம்
நின்றிடும் நாதமு மோங்கு மெழுத்துடன்
நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரின்
நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

விளக்கம்:

பாடல் #1270 இல் உள்ளபடி காலமாகவே நிற்கின்ற ஏரொளிச் சக்கரத்தில் உள்ள பிரகாசமான வெளிச்சம் என்று அழைக்கப்படும் ஒளி வடிவம் பெற்ற எழுத்துக்கள் எல்லாமும் சத்தம் என்று அழைக்கப்படும் ஒலி வடிவத்தோடு ஒன்றாகச் சேர்ந்து பரவெளியில் சென்று அடையும் போது அங்கு வீற்றிருக்கும் இறை சக்தியால் சக்தியூட்டம் பெற்ற பிறகு காலமாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமே அண்டத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களாகவும் மாறி விடுகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.