பாடல் #1282

பாடல் #1282: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

உன்னிட்ட வட்டத்தி லொத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

விளக்கம்:

பாடல் #1281 இல் உள்ளபடி ஓமெனும் பிரணவமே தியானப் பொருளாக உள்ளிருந்து பிணைத்திருக்கும் வெளிச்சத்திற்கும் சத்தத்திற்கும் உள்ளிருக்கும் எரிகின்ற நெருப்பு வட்டத்தோடு ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற மந்திரங்கள் நிலைத்து நிற்பதனால் சக்கர வடிவத்திற்கு ஏற்ப பின்னிப் பிணைந்து இருக்கின்ற கோடுகள் நிலைத்து நிற்காமல் தாமாகவே மறைந்து போய்விடும். நெருப்பு வட்டத்திலிருந்து தானாகவே வெளிப்பட்டு எழுகின்ற மந்திரம் தளர்ச்சி இல்லாமல் சக்கரத்திற்குப் பின்னால் நிலையாக நிற்கும். அப்போது தானாகவே முறைப்படுத்திக் கொண்டு நிலையாக நிற்கின்ற அந்த மந்திரத்தை ஒளி வடிவமாக தரிசிக்க முடியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.