பாடல் #1257

பாடல் #1257: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

சொல்லிய விந்துவு மீராறு நாதமாஞ்
சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருச்
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

விளக்கம்:

பாடல் #1256 இல் உள்ளபடி உள்ளுக்குள் இருந்து சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி மேலே ஏறி வந்த வெளிச்சத்திலிருந்து வெளிப்படும் சத்தங்கள் பன்னிரண்டு வகையான ஒலிகளாக இருக்கின்றது. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளும் சாதகருக்குள் வீற்றிருக்கும் தலைவனாகிய இறைவனின் அம்சமாகவே இருக்கின்றன. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளையும் அசபையாக (உச்சரிக்காமல்) மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் அவை பலவிதமாக பரிணமித்து மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களாக வெளிப்படும். இந்த நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களும் ஒன்று சேர்ந்து வெளிப்படும் போது மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.