பாடல் #1255

பாடல் #1255: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்
ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.

விளக்கம்:

உயிர்களுக்குள் இருக்கும் மூலாதாரமானது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் சக்திமயமான சக்கரமாக இருக்கின்றது. அதை தியானம் தவம் ஆகிய சாதகங்களின் மூலம் மாற்றி அமைக்கும் போது அதிலிருக்கும் குண்டலினி சக்தியானது எழுச்சி பெற்று சுழுமுனை நாடி வழியே மேலெழுந்து வரும் போது பிரகாசமான வெளிச்சமாக வருகின்றது. அந்த வெளிச்சத்திலிருந்து சத்தம் வெளிவருகின்றது. இந்த வெளிச்சமும் சத்தமும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சித் துளை வரை முழுவதும் நிறைந்து நிற்கும் போது அதன் நடுவில் அக்னியாக இருக்கும் சுடரே ஏரொளிச் சக்கரமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.