பாடல் #454

பாடல் #454: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்துமற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.

விளக்கம்:

இருபத்தைந்து தத்துவங்களும் (பாடல் #451 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து ஆணும் பெண்ணும் சேரும் பொழுது உருவாகும் கருமுட்டை கருவாக மாறி அதுவே ஆண் பெண் என்கிற இரண்டுவித உருவங்களாகவும் மாறுகின்ற உண்மையை பிறவி இல்லாத நிலையை அடைந்த ஞானிகள் கண்டு உணர்ந்திருக்கின்றார்களே தவிர மற்றவர்கள் அறியவில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.