பாடல் #85

பாடல் #85: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

விளக்கம்:

இறைவனை உணர்ந்து இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பம் இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற்று இன்புற்றிருக்க வேண்டும் என்றும் அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள் ஆவார். அந்த இறைவனை உள்ளுணர்வு கொண்டு அனைவரும் அறிந்து கொள்ளவே திருமந்திரத்தை வழங்கினோம். இந்தத் திருமந்திரத்தை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.