பாடல் #79

பாடல் #79: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

விளக்கம்:

திருமேனியில் சரிசமமான பங்கு சக்தி தேவியுடன் சிவபெருமான் வீற்றிருக்கும் திருஆவடுதுறை திருத்தலத்தில் இறைவன் ஞானம் போதித்த படர் அரசமரத்தின் நிழலில் இறைவனோடு சேர்ந்து அவன் திரு நாமங்களை ஓதிக்கொண்டே இருந்தோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.