பாடல் #78

பாடல் #78: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்
பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்
சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறை
சீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

விளக்கம்:

இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும் என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும் சீரும் சிறப்பும் உடையவளுமாகிய உமா தேவி தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டி பசு மாடாக இருந்து தவம்புரிந்த திரு ஆவடுதுறைத் திருத்தலத்தில் அவளை அனைத்து எழுந்த நாதராக இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.