பாடல் #76

பாடல் #76: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்
மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்
இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கி
உதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

விளக்கம்:

பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐந்து தெய்வங்களின் மூலம் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் இறைவனாகிய சதாசிவமூர்த்தி அருளிய ஆகமத் தத்துவங்களையும் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழ் மொழிகளையும் நான்மறையாகிய வேதங்களையும் அளவின்றி யாம் பெற்றுக் கொண்டு அவற்றிலேயே மனம் திளைத்து கொண்டிருக்கும் காலங்களின் மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தபோது இனியும் சென்று கொண்டிருக்கும் காலங்களை உதாசீனப்படுத்தாமல் உடனே காலத்தின் தேவையை உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.