பாடல் #84

பாடல் #84: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தம மாகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

விளக்கம்:

இறைவன் கூறிய உத்தமமான வேதங்களின் பொருளை அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதுவதால் சிறப்பு பெறுகின்ற மந்திரங்களை உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும் பொழுது உள்ளிருந்து உற்பத்தியாகும் பேரின்ப உணர்வுகளை என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.