பாடல் #75

பாடல் #75: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருந்தவக் காரணம் கேளிந் திரனே
பொருந்திய செல்வப் புவனா பதியாம்
அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்
பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

விளக்கம்:

யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள் இந்திரனே அனைத்து விதமான செல்வங்களையும் கொண்டிருக்கும் உலகங்கள் அனைத்திற்கும் தலைவனானவனும் எளிதில் செய்ய முடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் இறைவனின் திருவடிகளை தொழுதபோது எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனே இறைவனும் வந்து இருந்ததால் தான் என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

One thought on “பாடல் #75

  1. Jegadeeswari Reply

    Superb rendition, both in words and meaning and lyrical song … Best you can offer to society…. Hats off for your tremendous effort

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.