பாடல் #81

பாடல் #81: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

பின்னைநின் றென்னே பிறவி பெறுவது
முன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்
என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் தாமாக முயன்று தவங்கள் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்துபவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இப்படிப் பிறவியை வீணாக்காமல் இறைவனை உயிர்கள் அடையும் வழிகள் அனைத்தையும் குருநாதராக இருந்து எனக்குப் போதித்த இறைவன் அவற்றை நன்றாகத் தமிழில் வழங்குமாறே என்னை இங்கே அனுப்பி வைத்தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.