பாடல் #269

பாடல் #269: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லங் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்குஎய்த விற்குறி யாமே.

விளக்கம்:

பணக்காரர் என்று சிலரும் ஏழைகள் என்று பலரும் இருக்கும் வாழ்க்கையில் பணக்காரர்களிடமிருந்து பணம் பெறுவதற்காக அவர்களைப் பேரறிவு கொண்டவர்கள் என்று போற்றிப் புகழாமல் முக்தி கொடுக்கக்கூடிய இறைவனை போற்றி வழிபடுங்கள். அவ்வாறு செய்வது வேடன் தனக்கு வேண்டியதைக் குறிபார்த்து சரியாக அம்பு எய்து குறிதவறாமல் அடிப்பது போன்றது.

கருத்து: வில்லிலிருந்து குறிபார்த்து அம்பு விட்டு வேண்டியதை எடுத்துக்கொள்வது போல உயிருக்கு தேவையானது எது என்று குறிபார்த்து அதைத் தரக்கூடியவரைப் போற்றி வழிபட்டு வாழவேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.