பாடல் #265

பாடல் #265: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

வழிநடப் பாரின்றி வானோர் உலகம்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

விளக்கம்:

தர்ம வழியில் நடப்பவர் மட்டுமே விண்ணுலகத்திற்கு செல்லமுடியும். வேறு யாரும் செல்ல முடியாது. தரும வழியில் இல்லாமல் ஆசை வழிகளிலேயே நடப்பவர்கள் இருள் சூழ்ந்த உலகமான நரகத்திற்குத்தான் செல்ல முடியும். ஆசைகளின் வழி தம்மை இழுத்துச் செல்லும் வினைகளையும் மும்மலங்களையும் இறைவனது திருவருளால் நிக்கிவிட்டு தாம் கொண்ட தர்மநெறியில் நடப்பவர்கள் தாம் பிறந்த பிறவிக்கும் இன்னும் பிறக்கப் போகும் பல பிறவிகளுக்கும் நல்ல வினைகளை அதிகமாக சேர்த்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.