பாடல் #266

பாடல் #266: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்ற உண்மையை உணர்ந்து எல்லா உயிர்களையும் இறைவனாக எண்ணி அன்பு செலுத்துபவர்கள் ஈசன் கழல் அணிந்த திருவடிகளை தரிசிப்பார்கள். அனைத்து உலகப் பற்றுக்களையும் விடத்துணிந்து இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு தவம் புரியத் துணிந்தவர்கள் ஈசன் இருக்கும் கைலாசத்தை ஆளுவார்கள் (சிவகணங்கள் போல). தருமம் தவம் என்ற இந்த இரண்டு வழிகளிலும் எதையும் செய்யாதவர்கள் தாம் இறக்கும்போது துணைக்கு இறைவனும் வராமல் தருமங்களும் வராமல் எந்த துணையுமின்றி தமது வாழ்க்கையில் கொண்ட ஆணவத்திலும் கோபத்திலுமே மூழ்கி அழிந்து போய்விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.