பாடல் #263

பாடல் #263: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாகம் உரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.

விளக்கம்:

மார்புச் சளியால் வரும் இருமல் இரத்தக் குறைவால் வரும் இரத்த சோகை சளியால் வரும் காச நோய் அதிக சூட்டினால் வரும் உபாதைகள் (சுரம் போன்றவை) போன்ற அனைத்துவிதமான நோய்களும் தருமம் செய்யாமல் வாழுகின்ற உயிர்களைத் தேடி வரும். அதே சமயம் உயிர் பயத்தைத் தரக்கூடிய இடிச்சத்தமும் நாகப் பாம்பும் வாதத்தால் வரும் தொண்டை வீக்கமும் வயிற்றுக்கட்டியால் வரும் கழலை நோயும் இன்னும் பல இன்னல்களைத் தரும் நோய்களும் தருமம் செய்து வாழுகின்றவர்களின் வாழ்க்கையில் வந்து சேராமல் ஒதுங்கிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.