பாடல் #262

பாடல் #262: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையும்
திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
புறம்அறி யார்பலர் பொய்மொழி கேட்டு
மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே.

விளக்கம்:

தருமங்கள் என்னவென்பதை அறியாத உயிர்களுக்கு இறைவனின் திருவடிகளை நினைத்து வணங்கும் முறையும் தெரியாது. ஆதலால் அவர்களுக்கு சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்திற்குச் செல்லும் வழியும் தெரியாது. பலர் தம்மிடம் பொய்யாக கூறிய விஷயங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு பாவத்தை மட்டுமே அறிந்தவர்களாகவும் அறமில்லாத வீரத்தில் மற்றவர்களிடம் பகையை வளர்த்துக் கொண்டவர்களாகவும் மட்டுமே வாழ்ந்து துயரப்படுகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.