பாடல் #267

பாடல் #267: முதல் தந்திரம் – 17. அறஞ்செய்யான் திறம் (தரும வழியில் நடக்காதவர்களின் இயல்பு)

இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்ப மதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தையில் அறம்அறி யாரே.

விளக்கம்:

உயிர்கள் தமது வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் தமது முற்பிறவிகளில் செய்த நல்வினை தீவினை ஆகிய இரண்டுவித வினைச்செயல்களின் பயனால்தான். தாம் பிறந்த பிறவியில் தருமம் செய்து வாழும் உயிர்கள் பெறும் இன்பத்தைக் கண்ட பிறகும் தம்மை நாடி வந்தவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து மகிழும் அன்பு உள்ளம் இல்லாத பேதைகள் தருமம் எது அதன் பயன் என்ன என்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.