அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #29

1-9-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்கள், புனிதர்கள் இவர்களுக்கு உள்ள வித்யாசம் என்ன? அவர்களை எவ்விதம் அறிவது?

விஷேசமாக மகான்களுக்கும் புனிதர்களுக்கும் பேதங்கள் இல்லை சாதாரண மானிடர் போல் இருந்த போதிலும் மனநிலை ஒன்றே மாறும். சமதர்ஸனம் என்கின்ற ஓர் மகத்தான தகுதி ஒன்று உள்ளதே அதன் விளக்கம் என்னவென்றால் அவர்கள் மகான் என்னும் நிலையை அடைந்ததும் அனைவரையும் ஓரே விதமாகவே அன்பாகவே பார்க்கிறார்கள். இங்கு அவன் அன்பிற்கு எல்லையும் இல்லை அவர்களுக்கென தனியென நபரும் இல்லை. அனைவரையும் ஓர் நிலையில் பார்த்து அன்பளிக்கிறான் என்பது ஓர் சிறந்த நிலை. வெளியில் விஷேசமாக அறிகுறிகளும் இல்லை, கொம்புகளும் இல்லை, கீறும் நகங்களும் இல்லை, யாதுமில்லை இருப்பினும் பரிபூரணமாக இறை விசுவாசமும் இறை மீது உள்ள அன்பும் உண்டு. தானாக விசித்திரங்கள் அதிசயங்கள் செய்வதில்லை சமயங்களில் இறைவன் அவன் வழியாக சில அதிசயங்கள் புரிகிறான். இது ஒன்றை சாதாரண நிலைக்கும் மகான்களின் நிலைக்கும் வித்யாசமாகின்றது. குறிப்பாக கூறினால் இறைவன் அனைவர்க்குள் வசிக்கிறான் என்பது உண்மை நிலை. அவ்விறைவனை முழுமையாக உணர்ந்தவன் மகான் என்றும் இறைவன் உள் இருக்கின்றதை உணர்ந்து அவ்விறைவனை திருப்திப்படுத்தும் ஆனந்தப்படுத்தும் வேலையை இவன் வேலையை செய்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.