அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

5-8-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

யாம் இறைவனை நல்வழியில் நாடுகின்றோம் பூஜிக்கின்றோம் பல வழியில் சேவிக்கின்றோம் இருந்த போதிலும் இறைவன் எம்மைத் திரும்பிப் பார்ப்பதில்லை என்னும் மனக்குறை பலரிடம் உள்ளது. உண்மை என்னவென்றால் உண்மையாக நாம் இறைவனை நாடுவதில்லை. மண் படிந்த ஒரு குழந்தையை நீராட்ட வரும் தாயைக் கண்டு அந்தக் குழந்தை ஓடுகின்றதே அதுபோலவே நாமும் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். நமது லெளகீக (உலக) எதார்த்த பாசங்களை நாடி நாமும் பின் தொடர்ந்து செல்கின்றோம். அந்த தாயைப்போல் ஆண்டவன் என்றும் நம்மைத் தேடிக்கொண்டே இருக்கின்றான். நாம் ஒளிந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை மறவாது இருத்தல் வேண்டும். அந்தத் தாயிடம் சரணடைந்து நாமும் நமது அழுக்குகளை நீக்கிக் கொண்டால் எளிதாக இறைவனடி சேர்ந்திட இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.