அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #21

29-12-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அகங்காரம் என்பது தனித்தனி மனிதர்களுக்கு மட்டும் அல்லாது நடுகளுக்கு இடையையும் உள்ளது. இதற்கு மூலகாரணம் தனிப்பட்ட மனிதனின் அகங்காரமே. விளைவு போர்கள். இதுமட்டுமல்லாது அக்னி பூமியில் அதிகமாக காணக்கூடும். பெரிதாக நம்நாட்டில் பாதிக்கா போதிலும் மற்ற நாடுகளில் சேதம் உண்டாக வாய்ப்புகள் பெரிதாக உள்ளது. இந்த அகங்காரத்தை நீக்கிட வேண்டுமென்றால் இயன்ற அளவிற்கு அன்னம் அளிக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. அன்னம் அளிப்பதோடு அதன் பலனை உலக நன்மைக்கு சமர்பிப்பது நலம் தரும். இது எவ்விதம் செய்வது என்றால் வழி எளிது அன்னதானங்கள் செய்த பின்பு நீர் எடுத்து அப்புண்ணியத்தை எங்கும் செல்லட்டும், நாடு நலம் பெறட்டும் என்று பூமிக்கு செலுத்த வேண்டும். இதுவே இதற்கு சிறந்த வழி ஆகும். அனைவருக்கும் சினம் உண்டு யாதேனும் ரூபத்தில் அது பதுங்கி உள்ளிருக்கும் என்பது பொது அறிவாம் இதனை ஓங்காது தடுத்தல் வேண்டும். ஏனெனில் வருகின்ற ஆண்டில் பிரச்சனைகள் நேரிட்டால் அதற்கு காரணம் வீண் சினமும் அகங்காரமே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.