அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #15

24-5-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எண்ணம் போல் வாழ்க என்ற சொல்லின் பொருள் என்ன? நாம் தீவிரமாக எண்ணியது யாவும் நடைபெருமா?

எண்ணம் உறுதியாக இருக்குமாயின் அதன் பின் செயலும் தொடரும் அவ்விதம் செயல் தொடர வெற்றி உண்டாகும். வெறும் எண்ணத்தால் யாதும் சாதிக்க இயலாது என்கின்றதை உறுதியாக அறிதல் வேண்டும். எண்ணம் தீவிரமடைய செயல்கள் உருவாகும் என்பதே பொருளாகும். இதற்கு மற்றோர் அர்த்தமும் முக்கியமான அர்த்தமும் உண்டு நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ நமது எண்ணங்கள் எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதமே வாழ்வும் அமையும் உதாரணமாக தீய எண்ணம் படைத்தவனுக்கு காலம் செல்ல செல்ல தீய விளைவுகளே உண்டாகும். நல் எண்ணம் மற்றவர் நலம் வாழ்தல் வேண்டும் என எண்ணுதல் கடினம் காண்போர்க்கு உதவுதல் என எண்ணம் படைத்தவன் நல்வாழ்வே காண்பான். பின்பு ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற வினாவும் பின் தொடரும் அவரவர் கர்ம நிலைகள் உண்டு என்கின்றதை மீண்டும் எடுத்துரைக்கின்றோம். தெய்வங்கள் இருக்க கர்மங்களை நீக்க இயலாதா என்கின்ற மறு வினாவும் எழுகின்றது, இதற்கு யாம் ஒன்றை கூறுவோம். இறை விசுவாசத்துடன் செயல்பட சுமை தாங்கிகள் அப்அப்பொழுது தோன்றிட நமது சுமைகளை குறைக்குமேயன்றி கர்ம வினைகளை நாமே அனுபவித்தல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.