பாடல் #486

பாடல் #486: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்
தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்
கெட்டேன்இம் மாயையின் கீழ்மையைஇவ் வாறே.

விளக்கம்:

சுக்கிலத்தை இட்ட ஆண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அந்த சுக்கிலத்தை ஏற்றுக் கொண்ட பெண்களும் அது கருவாகியதா என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். தங்கத்தை நகையாகச் செய்யும் தச்சன் போல ஆன்மாவை வினைப்படி உயிராகச் செய்யும் பிரம்மன் இதை அறிந்திருந்தாலும் அதை யாருக்கும் அவன் சொன்னதில்லை. அனைத்தும் அறிந்த இறைவனும் உயிர்களிடம் கலந்து இருந்தாலும் அவனும் யாருக்கும் ஒன்றும் சொல்வதில்லை. இதையெல்லாம் உயிர்கள் அறியாதது அவர்களின் மாயையினால் தான். இறைவனின் அருளால் யான் இறைவனை எனக்குள்ளேயே கண்டு உணர்ந்துவிட்டதால் அந்த மாயையை அழித்து இதை அறிந்து கொண்டேன்.

உட்கருத்து: மாயையினால் உயிர்கள் எதையும் அறியாமல் இருக்கின்றார்கள். உண்மையை அறிந்த பிரம்மனும் இறைவனும் உயிர்களுக்கு தாமாகவே எதையும் சொல்லுவதில்லை. இறைவனை அறிந்து தமக்குள்ளேயே உயிர்கள் உணர்ந்து விட்டால் மாயை அழித்து உண்மையை உள்ளபடியே அறிந்து கொள்ளலாம். (இதை எவ்வாறு செய்வது என்பதை அடுத்த பாடல் #487 இல் விளக்குகின்றார்)

One thought on “பாடல் #486

Leave a Reply to V DevarajanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.