பாடல் #31

பாடல் #31: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

விளக்கம்:

மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனிதவடிவிலும் விண்ணகத்தில் உள்ள தேவர்களுக்கு தேவவடிவிலும் முத்திஅடைபவர்களுக்கு வீடுபேறுதருபவனாகவும் சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியை ஞானக் கண்ணால் கண்டுணர்ந்து அவர் மேல் அளவில்லாத அன்புகொண்டு நின்றிருந்தோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.