பாடல் #42

பாடல் #42: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போயரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கு
மாயகஞ் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றுந் தானே.

விளக்கம்:

சிவபெருமானை அடைக்கலம் புகுந்து துதிப்பவர்கள் பெறத்தக்க பயன் என்னவென்றால் நான்கு திருமுடியுடைய பிரம்மன் படைப்பான மாய உலகில் மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டியவர்கள் ஆனாலும் மூங்கில் போன்ற திரட்சியான தோள்களையுடைய உமாதேவியின் தலைவனான சிவபெருமான் அவர்களுடன் பொருந்தி இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.