பாடல் #43

பாடல் #43: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்கு
நிரனடி செய்து நிறைந்துநின் றானே.

விளக்கம் :

இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தை கூறி அன்பால் கசிந்துருகி அழுது ஆராய்ந்து தெளிந்து இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து அந்த உணர்விலே இலயித்து இருப்பவர்களுக்கு திருவடிபேற்றை அருளி இறைவன் அவர்களுடன் நிறைந்து இருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.