பாடல் #1068

பாடல் #1068: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தோத்திரஞ் செய்து தொழுது துணையடி
வாய்த்திட வேத்தி வழிபடு வாரிரும்
பார்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.

விளக்கம்:

பாடல் #1067 இல் உள்ளபடி தோத்திரங்களை சொல்லி யாம் வழிபடும் திரிபுரை சக்தியின் திருவடிகளை யாரெல்லாம் போற்றி வழிபடுகிறார்களோ அவர்களுக்குத் துணையாக திரிபுரை இருக்கின்றாள். அவள் தனது திருக்கரங்களில் வில்லைப் போன்ற கரும்பையும் இரும்பாலான அங்குசத்தையும் பாசக் கயிறையும் வைத்துக் கொண்டு மென்மையான திருமேனியைக் கொண்ட ஆதிசக்தியாக இருக்கின்றாள்.

கருத்து:

திரிபுரை சக்தியானது சரஸ்வதி எனும் பெயருடன் உயிர்களின் வாழ்க்கைக்குத் தேவையான அறிவைக் (கல்வி) கொடுத்து துணையாக இருப்பதை இந்தப் பாடலில் உருவகிக்கலாம். வில்லைப் போன்ற கரும்பு மாயையை அழித்தலையும், பாசக் கயிறு மாயையால் மறைத்தலையும், அங்குசம் அடியவர்கள் மாயையில் சிக்கித் தவிக்கும் போது தடுப்பதையும் குறிக்கின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.