பாடல் #1066

பாடல் #1066: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

நின்றா ளவன்ற னுடலு முயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக வென்னுட் புகுந்துணர் வாகியே
நின்றாள் பரஞ்சுட ரேடங்கை யாளே.

விளக்கம்:

பாடல் #1065 இல் உள்ளபடி மூன்று மண்டலங்களிலும் நிறைந்து நிற்கின்ற திரிபுரை சக்தியானவள் இறைவனோடு ஒன்றாக சேர்ந்து எமக்குள் உடலாகவும் உயிராகவும் உணர்வாகவும் இருக்கின்றாள். அதுபோலவே அனைத்து உயிர்களிலும் இருக்கின்றாள். இவள் இறைவனை அடையும் சிவகதிக்கான வழியைக் கொடுக்கும் ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடனும் சிவகதியை சொல்கின்ற அனைத்து சொற்களாகவும் இருக்கின்றாள்.

குறிப்பு: ஏடங்கை (ஏடு ஏந்திய கை) என்பது எழுதப்பட்ட அல்லது சொல்லப்பட்ட அனைத்து வார்த்தைகளாகவும் இருப்பவள் என்று பொருள்.

One thought on “பாடல் #1066

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.