பாடல் #1054

பாடல் #1054: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே.

விளக்கம்:

ஞானத்தின் மொத்த உருவமாக இருக்கும் திரிபுரை சக்தியானவள் தமக்கு உண்மை ஞானத்தை வழங்க முடியும் என்பதை அறிந்து கொண்டவர்கள் பராசக்தி எனும் பெயருடைய அவளே பேரானந்தத்தின் உருவமாக இருப்பதையும். உருவம் அருவம் அருவுருவம் ஆகிய அனைத்துமாக இருப்பதையும். அனைத்தையும் தன் இச்சைப் படி ஆட்டி வைப்பதையும். இறைவனின் சரிபாதியாக இருப்பதையும் அறிவார்கள்.

கருத்து: திரிபுரை சக்தி ஞானத்தின் மொத்த உருவமாக பராசக்தி எனும் பெயருடன் இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: உருவம் என்பது பார்க்கக்கூடிய ரூபம் (உதாரணம் சிவபெருமான்), அருவம் என்பது உணரக்கூடிய சூட்சுமம் (உதாரணம் சக்தி), அருவுருவம் என்பது சூட்சுமத்தின் ரூப வடிவம் (உதாரணம் சிவலிங்கம்).

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.