பாடல் #44

பாடல் #44: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே.

விளக்கம் :

போற்றுவார்கள் அமரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் அசுரர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை போற்றுவார்கள் மனிதர்கள் தூய நிர்மல இறைவனின் திருவடியை யாமும் எமது அன்பினுள் அவனை போற்றி நிலைபெறச்செய்தேன்.

One thought on “பாடல் #44

Leave a Reply to GunasekaranCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.