பாடல் #403

பாடல் #403: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்துஇருந் தானே.

விளக்கம்:

அசையா சக்தியும் அசையும் சக்தியும் சேர்ந்த ரூபமான அருளல் தொழிலை செய்யும் சிவனின் அம்சம் முழுவதும் நிறைந்து தாமாகவே சதாசிவனிடமிருந்து தோன்றியவர் மறைத்தல் தொழில் செய்யும் மகேஸ்வரன். இவரே காத்தலையும் அழித்தலையும் செய்யும் உருத்திரன் திருமாலின் செயல்களில் இயக்கமாக இருக்கிறார். திருமாலின் தொப்புள் கொடியிலிருந்து வெளி வந்த தாமரை மலரின் மீது உருவானவர் அனைத்தையும் படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மன் ஆவார். ஆகவே இந்த ஐந்து தேவர்களாகவும் அசையா சக்தியான இறைவன் ஒருவனே ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவராகக் கலந்து இருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.