பாடல் #389

பாடல் #389: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.

விளக்கம்:

ஏழு உலகங்களையும் காப்பாற்றி பிறகு வெளிப்படுத்திய திருமால் அண்டங்கள் அனைத்திலும் இருக்கின்ற தேவர்களின் தலைவனாகவும் ஆதிமூல நாயகனாகவும் விளங்குகின்ற சிவபெருமான் கர்வத்தினால் தனது ஐந்து தலைகளில் ஒன்றை இறைவனால் கொய்யப்பட்டு நான்கு முகங்களை மட்டுமே கொண்டவனாகிய பிரம்மன் ஆகிய இந்த மூவருடனும் கலந்து இருந்து பழமை வாய்ந்த இந்த உலகங்கள் அனைத்தையும் படைக்கும் பரம்பொருள் சதாசிவமூர்த்தி ஒருவனே ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.