பாடல் #405

பாடல் #405: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்து
மைந்தார் பிறவியை அமைந்துநின் றானே.

விளக்கம்:

சிவந்த தாமரை மலரின் நிறத்தைப் போன்ற பிரம்மனும் கொழுந்து விட்டு எரியும் தீப் பிழம்பின் நிறத்தைக் கொண்ட எமது இறைவன் சிவபெருமானும் நீர் நிறைந்த மேகங்களைப் போன்ற கருமை நிறம் கொண்ட திருமாலும் சேர்ந்து மாயையால் பாசப்பிணைப்புகளை உண்டாக்கி உயிர்களை மயக்கி பூக்களை தங்களது கூந்தலில் சூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்துடன் ஆண்களை கூடுமாறு செய்து அவர்களின் கூடுதலில் பிறவியை அமைத்து நிற்கின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.