பாடல் #29

பாடல் #29: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

காணநில் லாய்அடி யேற்குற வாருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்
தாணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டிருப்பதிலிருந்து மாறாத குணமுடைய அடியவர்களின் மனதில் ஆணி அடித்தது போல அமர்ந்து இருக்கும் எம்பெருமான் சதாசிவமூர்த்தியே உங்களைக் காண வேண்டும் என்ற ஆசையால் துடிக்கும் எமது முன் நீங்கள் எழுந்தருள வேண்டும். நீங்கள் எம் முன் எழுந்தருளிவிட்டால் உங்களை உடனே எம்மோடு ஆரத்தழுவிக்கொள்வதில் யாம் வெட்கப் படமாட்டோம்.

One thought on “பாடல் #29

Leave a Reply to Balachandran GobichettipalayamCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.