பாடல் #453

பாடல் #453: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புறு காலத் திருவர்முன் பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.

விளக்கம்:

ஆணும் பெண்ணும் சிற்றின்பத்தில் மகிழ்ந்து கூடுகின்ற போதே அவர்களின் முன் ஜென்ம வினைகளாலும் புதிதாக பிறக்கும் உயிரின் முன் ஜென்ம வினைகளாலும் இவர்களுக்கு இந்த உயிர் பிறக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அந்த உயிரினால் பெற்றவர்களும் பெற்றவர்களால் அந்த உயிரும் அடையும் துன்பத்திற்கு காரணமாக இருக்கும் பாசம் எனும் துயரமாகிய பந்தத்தால் கட்டி வைத்து அந்த உயிர் உலகத்தில் எத்தனைக் காலம் வாழ வேண்டும் என்பதையும் அந்த உயிரின் பண்புகளையும் அந்த உயிரின் வாழ்க்கை முறையையும் முன்பே முடிவு செய்து ஆணும் பெண்ணும் அன்பாக சேர்ந்த போதே அதற்கு ஏற்றவாறு கருவை அமைத்து முடிக்கின்றான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.