பாடல் #287

பாடல் #287: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பில் இறைவனை யாமறி வோமென்பர்
இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி
அன்பில் அவனை அறியவுமி லாரே.

விளக்கம்:

தாம் முன்பு எடுத்த பிறவியையும் அந்தப் பிறவியில் இறந்த விதத்தையுமே அறியாத உயிர்கள் தாம் கொண்ட சிற்றின்ப அன்பிலேயே இறைவனைத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுவார்கள். பேரின்பத்தையும் கொடுத்து பிறவியில்லாத வாழ்வைக் கொடுப்பவன் பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவன். அவனைத் தூய்மையான அன்பின் மூலம் அறிந்து கொள்ளாமல் இவர்கள் இருக்கின்றார்களே!

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.