பாடல் #289

பாடல் #289: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் னாருயி ராய்நின்ற ஈசனை
மட்டுக் கலப்பதுவே மஞ்சன மாமே.

விளக்கம்:

இளமை இருக்கும்போது விட்டுவிட்டு வயதான பிறகு அனைத்திலும் உயர்ந்த ஜோதி வடிவான இறைவனை பிடித்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம் ஆகும். செய்யும் அனைத்து காரியங்களிலும் இறைவனை நினைத்துக்கொண்டே வாழ்ந்து வருவது இறைவனை சென்றடைய வழிவகுத்து என்றும் அழியாத பெருமையை கொடுக்கும். அனைத்து உயிர்களுக்குள்ளும் ஆருயிராக இருக்கும் சிவபெருமானுடன் அளவில்லாத பேரன்பில் கலந்து இருப்பதுதான் உயிர்களுக்குள் இருக்கும் இறைவனுக்கு செய்யும் மிகச்சிறந்த அபிஷேகம் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.