பாடல் #284

பாடல் #284: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்துஅவர் முன்புநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களிடம் உண்மையான அன்பு வைத்து இருக்கும் அன்பர்களுடன் சேர்ந்து இருக்கும் பேரொளியான இறைவனை வெறும் சிந்தனை மட்டுமே செய்பவர்களால் அவன் எப்படி இருப்பான் என்பதைத் தெரிந்து கொள்ளவோ அவனது பேரன்பையோ அறிந்து கொள்ளவோ முடியாது. சிந்தனையை விட்டுவிட்டு அவன் மீது உண்மையான பக்தி கொண்டு அவன் திருவடிகளைப் பணிந்து தொழுது வருபவர்களுக்கு அவன் முக்தியையும் கொடுத்து அவர்களின் கண் முன்பும் வந்து நிற்பான் இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.