பாடல் #283

பாடல் #283: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

புணர்ச்சியுள் ஆயிழை மேலன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லார்க்கு
உணர்ச்சியில் லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது வாமே.

விளக்கம்:

ஆண்கள் தாம் அன்புகொண்ட மனைவியரோடு இருக்கும் பொழுது அந்த உணர்விலேயே ஊறித் தம்மை மறந்து இருப்பதுபோல இறைவன் மீது தாம் வைத்திருக்கும் தூய்மையான அன்பின் உணர்ச்சியிலேயே ஊறித் தம்மை மறந்து இருக்கக்கூடிய உயிர்களுக்கு வெறும் உடல் உணர்ச்சி இல்லாமல் உள்ளத்திலிருக்கும் உணர்ச்சியோடு ஒன்றாகக் கூடி அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை காத்து நிற்பான் இறைவன். அப்படிப்பட்ட இறைவனிடம் கிடைக்கும் பேரின்பம் உலகப் பற்றுக்களோடு இருக்கும் அன்பில் கிடைக்கும் சிற்றின்பத்தைவிட மிகவும் பெரியது ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.