பாடல் #1103: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
தையல்நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நூக்கு மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே.
விளக்கம்:
பாடல் #1102 இல் உள்ளபடி சாதகரை உலகத்தோடு பிணைத்து நன்மை புரிகின்ற வயிரவியானவள் உலகோர் செய்யும் அனைத்து விதமான தவத்தின் தலைவியாக இருக்கின்றாள். அந்த தவத்தின் பயனாக சாதகரின் மாயையை நீக்கி அருளுகின்ற மனோன்மணியாகவும் இருக்கின்றாள். அவளை அமைதியான மன நிலையில் வேறு எண்ணங்கள் இல்லாமல் புகழ்ந்து போற்றி வணங்குங்கள். அப்படி வணங்கினால் கொடுமையான இந்த உலக வாழ்க்கையை மறுபடியும் அனுபவிக்காத படி உங்களின் பிறவிகளை நீக்கி அருளுவாள்.
