பாடல் #1119

பாடல் #1119: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

இருளது சத்தி வெளியதெம் மண்ணல்
பொருளது புண்ணியர் போகத்து ளின்பந்
தெருளுறு சிந்தையைத் தெய்வமென் றெண்ணில்
அருளது செய்யுமெம் மாதிப் பிரானே.

விளக்கம்:

உயிர்களுக்குள் ஒளியை மறைக்கின்ற இருள் தன்மையாக ஆதி சக்தியான இறைவியும் இருளை அகற்றுகின்ற வெளிச்ச தன்மையாக எமது தலைவனாகிய இறைவனும் இருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்து உணர்ந்தவர்கள் புண்ணியம் செய்தவர்களாக இந்தப் பிறவியிலேயே பேரின்பத்தை பெறுகின்றார்கள். இந்த உண்மையை அறிந்து தெளிவு பெற்ற ஞானமே இறைவனை அடையும் வழியைக் காட்டும் என்று நம்பி முழுமையாகச் சரணடைந்தால் ஆதியாகிய இறைவன் அவர்களுக்குள் வெளிப்பட்டு அருள் புரிவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.