பாடல் #1099

பாடல் #1099: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி யுணரி லுடலுயி ரீசனாம்
பேதை யுலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத வுலவாத கோலமொன் றாகுமே.

விளக்கம்:

பாடல் #1098 இல் உள்ளபடி ஆதி சக்தியான வயிரவியே எப்போதும் இளமையுடன் அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து இடத்திற்கும் அரசியாக வீற்றிருக்கின்றாள். அவளது மந்திரத்தை செபித்து தமக்குள் அவளை உணரும் சாதகர்களின் உடலும் உயிரும் இறைவனாகவே ஆகிவிடும். மாயையால் மயங்கி இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் படி எப்போதும் அழியாத உடலையும் அவர்கள் பெற்று விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.