பாடல் #1079

பாடல் #1079: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)

தென்னன் றிருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியுள பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி யந்தம் பகவனோ
டுன்னுந் திரிபுரை யோதிநின் றானுக்கே.

விளக்கம்:

திருக்கயிலாய மலையில் உலகங்கள் யாவும் போற்றி வணங்கும் மாபெரும் குருவாகவும் அனைத்திற்கும் காவலனாகவும் வீற்றிருக்கும் பேரழகுடைய சிவபெருமானுடன் திரிபுரை சக்தியாகிய அம்மையும் சேர்ந்து இருக்கின்றாள். அது போலவே வயிரவி மந்திரத்தை இடைவிடாது செபித்து வரும் சாதகர்களின் உள்ளத்தையே கயிலாய மலையாகக் கொண்டு இறைவன் வந்து வீற்றிருக்கும் போது அவனுடனே ஒன்றாகக் கலந்து திரிபுரையும் வந்து வீற்றிருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.