பாடல் #1013

பாடல் #1013: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

நமவது வாசன மான பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற வாதி நாடுவது அன்றாஞ்
சிவமாகு மாமோனஞ் சேர்தல்மெய் வீடே.

விளக்கம்:

உயிர்களின் ஆன்மா தன் ஆசைகளினால் நான் எனும் அகங்கார மாயையோடு பல பிறவி எடுக்கிறது. ஆன்மாவின் தலைவனாகிய இறைவன் சிவமாக உயிர்களுக்குள் தாமாகவே மறைந்து இருக்கின்றான். சாதகர்கள் பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ளபடி அருச்சினை செய்து நான் எனும் அகங்காரம் இல்லாமல் இறைவனை நாடும் போது அன்றே எண்ணங்களே அற்ற நிலையை பெற்று இறைவனோடு சேர்வதே உண்மையான வீடுபேறாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.