பாடல் #1006

பாடல் #1006: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

எய்தி வழிப்படில் எய்தா தனவில்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமும்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே.

விளக்கம்:

பாடல் #1003, #1004 மற்றும் #1005 இல் உள்ள முறைப்படி இறைவனை அன்போடு மனம் ஒன்றி வழிபட்டால் கிடைக்காத பேறுகளே இல்லை. இந்திரனிடம் உள்ள செல்வமும் எட்டு வகை சித்திகளும் பிறவியில்லா முக்தியும் கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.