பாடல் #1010

பாடல் #1010: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
அருளறி யாமையும் மன்னு மறிவு
மருளிவை விட்டறி யாமை மயங்கு
மருளுஞ் சிதைத்தோ ரவர்களா மன்றே.

விளக்கம்:

ஆகாயத்தில் இருட்டு வெளிச்சம் என்று இரண்டும் இருப்பது போல் மனதிலும் அறிவு அறியாமை என இரண்டு தன்மை உள்ளது. மயக்கத்தைத் தரும் அறியாமையும் தெளிவைத் தரும் அறிவும் ஆகிய இரண்டுமே நிலை பெற்றிருக்கும். பாடல் #1009 இல் உள்ளபடி மானசீக பூஜையின் மூலம் இறையருளைப் பெற்று உள்ளிருக்கும் மாணிக்க ஒளியைக் கண்டவர்கள் தமது அறியாமையை அன்றே அழித்தவர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.