பாடல் #1004

பாடல் #1004: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

சாங்கம தாகவே சந்தொடு சந்தனந்
தேங்கமழ் குங்குமங் கர்ப்பூரங் காரகிற்
பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
தாங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே.

விளக்கம்:

புனுகு கஸ்தூரி ஆகிய கலவைகளுடன் சேர்த்து அரைத்த சந்தனம் வாசம் மிகுந்த குங்குமம் பச்சைக் கற்பூரம் கருமையான அகில் கட்டையை அரைத்த சாந்து ஆகியவற்றை சரியான அளவு எடுத்து முறைப்படி அவற்றை பன்னீரால் குழைத்து அந்தக் கலவையை இறைவனின் திருமேனியின் மேல் அழகுடன் காப்புப் போல பூசிவிட்டு அன்போடு அருச்சனை செய்தல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.