பாடல் #1003

பாடல் #1003: நான்காம் தந்திரம் – 3. அருச்சனை (பூக்கள் நைவேத்யம் மற்றும் தூப தீபங்களின் மூலம் இறைவனை வழிபடும் முறை)

அம்புய நீலங் கழுநீ ரணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளஞ் சுரபுன்னை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.

விளக்கம்:

  1. தாமரை மலர் (அம்புயம்) 2. கருங்குவளை மலர் (நீலம்) 3. செழுங்கழுநீர் மலர் (கழுநீர்) 4. அழகாக கட்டிய நெய்தல் மலர் 5. மாலை மணம் விரிக்கும் பாக்கு மலர் (பூகம்) 6. மாதவி மலர் 7. மந்தாரை மலர் 8. தும்பை மலர் 9. மகிழம்பூ மலர் (வகுளம்) 10. சுரபுன்னை மலர் 11. மல்லிகை மலர் 12. செண்பகம் மலர் 13. பாதிரி மலர் 14. செவ்வந்தி மலர் ஆகிய பதினான்கு வகைப் பூக்களும் இறைவனுக்கு அருச்சினை செய்ய ஏற்ற மலர்கள் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.