பாடல் #34

பாடல் #34: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

விளக்கம்:

வாசனையில்லாத வெறும் கூந்தலில் எப்படி வாசனைப் பொருட்களை வைத்து அரைத்த சாந்தைப் பூசியவுடன் இனிமையான வாசனை வருகின்றதோ அதுபோலவே உண்மையில்லாத வெறும் உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு உண்மையான இறைவனை அடைந்து சிவமனம் கமழும் முக்தியைப் பெறுவதற்கு இறைவன் அமர்களுக்கு அருளிய மெய்ஞான வழி என்னவென்றால் ஆயிரம் சூரியனைப் போன்று பிரகாசிக்கும் பேரறிவு ஒளியைக் கொடுக்கும் ஓம் நமசிவாய எனும் திருநாமம். அதன் அருமையை உணர்ந்ததால்தான் செயலற்று ஓய்ந்து இருக்கும்போதும் செயல்களைச் செய்துகொண்டு இருக்கும்போதும் அந்தத் திருநாமத்தை இடைவிடாது போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றேன்.

One thought on “பாடல் #34

Leave a Reply to AlagesanCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.